உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம் 3 தொடர்ச்சி. கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும். ஆளுமைப்படுத்துவது, ஆளுகைக்கு கீழ்படிவது மற்றும் சரிசமமாக கைக்குலுக்குவது என்ற பொதுவான நிலைகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேற்கண்ட படத்தில் காணப்படும் பெண் ஆளுகைக்கு கீழ்படிவது என்ற நிலையில் அந்த நாயோடு கைக்குலுக்கின்றார் என்றால், அந்த நாய்க்கு தன் கையென்ற காலை திருப்ப முடியாது என்ற நிலையே காரணம்! பொதுவாக புகைப்படங்களில் பார்ப்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள், அவை அந்தந்த கணத்திற்கு நிகழுபவை!!! மூன்றுவிதமான கைக்குலுக்குகள் இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு க...
அத்தியாயம்-3 கையெடுத்துக் கும்பிடுதல், கைக்குலுக்குதல், மற்றும் உள்ளங்கை சைகைகள். சின்ன வயதில் அடிக்கடி கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு சிறுவயது நண்பர்கள் அடர்ந்த காட்டுவழியே பயணம் செய்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு கரடி வருவதை பார்த்து உடல்நடுங்கி நின்றனர். இருவரில் ஒருவனுக்கு மரம் ஏறத்தெரியும். அதனால் சட்டென்று அருகிலிருந்த அடர்ந்த மரத்திலேறி தப்பித்துக்கொள்கிறான். அடுத்தவன் என்ன செய்வது என்று முழித்தபோது, “அசையாமல் மல்லாந்து படுத்திருந்து, மூச்சுக்கூட விடாமல் இருந்தால், செத்துப்போய் விட்டான் போலுள்ளது, என நினைத்து கரடி போய்விடும்”, என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்குவர, அதேபோல் செய்கிறான். கரடியும் அவன் அருகே வந்து, குனிந்து சற்று மோந்து பார்த்துவிட்டு, பேசாமல் சென்று விடுகிறது. மரத்தில் இருந்தவன் கீழே இறங்கிவந்து, “கரடி உன்னிடம் ஏதோ சொன்னதே, என்னது அது?”, என்று கேட்கிறான். “ஆபத்துக்காலத்தில் உதவாதவனை நண்பனாக கொள்ளாதே என கரடி சொன்னது”, என இவனும் பதில் கூறுகிறான். நாய்கள், பூனைகள், புலிகள் என எல்லா விலங்குகளும் தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றன. சண்டைக்கு உயிர்,உ...